Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் இந்து முன்னணியினர், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

ஏப்ரல் 11, 2020 08:15

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் வழங்கப்பட்டது. 

திருப்பூரில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக கொரொனா வைரஸ் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் கபசுர குடிநீர் வடக்கு மற்றும்  மேற்குப் பகுதி சார்பாக  சாமுண்டிபுரம் வளையங்காடு எஸ்.ஏ.பி. தியேட்டர் காந்திநகர் மற்றும் கொங்கு மெயின் ரோடு மற்றும் பல பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வடக்கு  மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முதியவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் பல குடும்பங்களுக்கு இயக்கத்தின் சார்பாக அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி மற்றும் பலவகையான பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்கள் கிஷோர் குமார், செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேவுகன், செந்தில் குமார், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ், மணிகண்டன் மற்றும் மாநகர நகர பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்